Thursday, December 31, 2009

[ நீ பெற வேண்டியது நின் கையில் : (எனக்கு இட்டது) ]

காலம்
கடக்கிறது கேட்காமல்,
கரைகிறேன் தெரியாமல் !

மனம்
பழக்கங்கள் பண்பாவதால்,
பண்பெற வேண்டும் !

ஆசை
இருமுனை ஆயுதம்,
ஏற்றமோ பார்க்கணும் !

மனிதன்
மாசற வாழ
மகத்துவம் செய் !

தாய்
தரணியில் ஓர்
தன்னலமற்ற சேவகி !

எண்ணம்
ஏற்றம் வேண்டும்,
எதிலென்று அறி !

கடவுள்
காட்சிப் பொருளல்ல
கண்டுபிடி நீயே !

யோகம்
புத்தனாய் இல்லாவிடினும்,
புத்தியால் பயன்பெறு !

காதல்
காமக் காதலுண்டு,
காதல் காமமில்லை !

தமிழ்
தாயின் நேசத்தை,
தானறிய வேண்டும் !

தோழமை
நெடிய வழியில்,
வருமொரு துணை !

முன்னோர்
மூத்தோர் முதுமொழி,
நன்மொழி ஒன்றே !

சித்தன்
எளிமை கொண்டதனால்
ஏற்றம் கண்டோர் !

அறிவு
மெய்யென்ற ஒன்றை,
நாடத்தான் சமயங்கள் !

Sunday, December 13, 2009

[:மனிதன் என்ற மகத்துவன்:]

தன் சிந்தையாலே
எதையும் வென்று-விட்டான் !
இயந்திரம் எல்லாம்
தந்திரமாய் கண்டு-விட்டான் !


பம்பரமாய் சுற்றி -சுற்றி
வாழ பழகிக்-கொண்டான் !
பாரினிலே புதுப்-பொலிவு
யாவும் பெற்று - கொண்டான் !

தேன் தமிழை இவன்
பேச நாக் கூசுகின்றான் !
பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !

இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !

Thursday, November 26, 2009

[இன்னொரு இதயம் வேண்டும்]

இருவரின் காமப்பசிக்கு
பிறந்த பிள்ளை !

தன்வயிற்றுப் பசிக்கு
பிச்சை எடுக்கிறது ?

எதிர்காலத்தின் கனவு
கண்களில் இல்லை !

அதன் நிகழ்காலமோ
மற்றவர்க்கு தொல்லை?

நெஞ்சமது குமுறுகிறது !!
நெருடலான நிமிடங்களை -

கடக்க இன்னொரு
இதயம்தான் வேண்டும் !

Monday, November 16, 2009

[காதல்]

ஒன்றான உருவே
உருவற்ற திருவே
நன்றான ஒன்றே !
நமனோட்டும் அரசே !!

கன்றான என்றன்
கர்மங்கள் தொலைக்க
கனிவது செய்வீர் !
காதலை ஏற்பீர் !!

Monday, November 9, 2009

[கவிதை]

மழைக்குள் குடை இருந்தும் ;
குடைக்குள் மழை வருவதில்லை !

இறைக்குள் நாம் இருந்தும் ;
இறைப் பற்றிய தெளி(ரி)வு இல்லை !

மனிதனின் மகத்துவம் அறிந்தும் ;
நல்வாழ்வு வாழ்வார் இல்லை !

கர்மங்களை தொலைத்து நாம் ;
கடைத்தேறுவது எக்காலமோ ?

Friday, November 6, 2009

இயற்கை என்னும் இளையவன்

எவ்வளவு நீரைய்யா எங்கே வைத்திருந்தார் !
இவ்வளவு நீரையும் எப்படி பாதுகாத்தார் !

கொஞ்சம் நினையுங்கள் கர்மங்களை தொலையுங்கள்
தஞ்சமுடைய இயற்கையை விஞ்சும் மனிதரில்லை !

இருப்பிடம் தரனியாய் வைத்தது யார்
கேட்டுப்பெற்றோமா இல்லை கெட்டுப் பெற்றோமா ?

விட்டொழித்து அழைத்து செல்ல வருவாரா !
கோள்களும் கணக்காய் சுற்றுவது எப்படி !

எண்ணற்ற கேள்விகள் அடிமனத்தின் ஆழத்தில்
எப்போது பதில்வந்து எனக்கு கிடைக்கும் !!!!!!

படைத்தவன் அருளென்று சும்மாயிருக்கவும் முடியவில்லை,
எம்மால் ஆவதாக எதுவும் விளங்கவில்லை.