Monday, August 2, 2010

உழைப்பும் களைப்பும்;


நாளெல்லாம் உழைத்து நரம்பெல்லாம் இழுக்க,
நல்லுணர்வும் இல்லா நாய்போலே திரிந்து,
உழைத்த பயிரின் உபரிப்போக, விற்றுவந்தால் -
மிஞ்சியிருப்பது என் நெஞ்சின் கனமே !

நாளும் தெரிந்த நல்லோர் நன்றாய் தான் -
சொன்னர்; விவசாயி நாட்டின் முதுகெலும்பென்று
ஒருகனம்; பாரீரெனை தெரிகிறதா? எனது -
முதுகெலும்பு; எத்துனையென்று எண்ணிக்கொள்ளுங்கள்...