Wednesday, June 29, 2011

மாளா மனம் !

தேடியே இருந்தேன்,
தினம் இளைத்தேன்
கூடியும் பேசினோர்
குறைகளை விட்டகன்றேன்
ஆயினும் மனமோ,!

குன்றொனா குன்றின்
குடங்கை அதிலேறி
குரெங்கென ஆடுது
மாசற வாழவே
மகத்துவம் என்செய்தாய்!

மதிகெட்டு ஓடும்
மனத்திடை புகுந்து
மறித்து விட்டாலும்
மதியினை மதியாமனம்
மடியவில்லை இன்னும்...
-

வினைகள் வீழட்டும்
விடிவு பிறக்கட்டும்
என வாழ்த்துவீரே!

Monday, February 14, 2011

தாயவள் வேண்டுமே!

அப்போ;
தள்ளாடி நடக்கயிலே
தாடையை பிடித்துருவி
இந்தாடி செல்லமென்று
முத்தமழை பொழிந்து
பொழுதாய் சோறூட்டி
பொறுப்பாய் நீராட்டி
வாடாமல் வைத்தவளே!

இப்போ;
தூரமாய் நீயிருந்து
தூலத்தை பாரடாயென்றும்,
விட்டிடாதே பின்னதனால்
கொட்டிடாதே என்றுரைக்கும்
போதெல்லாம் ஏனோயெதற்கோ
ஏக்கமுறுமென் நெஞ்சம்
தேடுதடி உன்மடியை!