Monday, August 2, 2010

உழைப்பும் களைப்பும்;


நாளெல்லாம் உழைத்து நரம்பெல்லாம் இழுக்க,
நல்லுணர்வும் இல்லா நாய்போலே திரிந்து,
உழைத்த பயிரின் உபரிப்போக, விற்றுவந்தால் -
மிஞ்சியிருப்பது என் நெஞ்சின் கனமே !

நாளும் தெரிந்த நல்லோர் நன்றாய் தான் -
சொன்னர்; விவசாயி நாட்டின் முதுகெலும்பென்று
ஒருகனம்; பாரீரெனை தெரிகிறதா? எனது -
முதுகெலும்பு; எத்துனையென்று எண்ணிக்கொள்ளுங்கள்...

Sunday, June 13, 2010

வேடதாரி!

நாளொன்றுக்கு வேறொன்றாய்
முகம் மாற்றும் நானொரு -
நல்ல வேடதாரி! -என்னைப்
போல் நீங்களும் தான்?
வேறென்ன சொல்ல...

Wednesday, June 2, 2010

விரும்பா நேர வெறுப்பில் உமிழ்ந்தவை:

செய்த பிழைக்காக சிரம் தாழ்த்தியும்,
தலைக் கொய்தானே சிறுநெஞ்சை - அவனிடம்
தவறுக்காய் தலைவணங்கியும் விதைத்தானே நஞ்சை
விலையாநிலம் போலானது கடுஞ்சொல்லால் புஞ்சை !

தாயைப் பழித்தானே தரவுக் கூரா ?
அவனுக்கும்பா லூட்டியதொரு தாய் மாரா ?
வார்த்தைகளால் வஞ்சிக்கும் இவன்போன்றோர் தேரா ?
அவனடியையும் தாங்கி நிலமிருக்குது பாரா ?

Friday, March 26, 2010

தமிழன் வாழ்வியல்

ன்றுகூடி கொட்டுங்கடி
கை தட்டுங்கடி !
மிழன்; வாழையடி -
வாழையாய் வாழவேண்டுமடி !

ல்லவனாய் நடிப்பவனுக்கு
ம்பளம் - நாலுகோடி ?
ல்லவனாய் வாழ்பவனின்
வாழ்க்கை நாறுதடி !!

Sunday, January 31, 2010

சிறுபிள்ளை :

டி ஆடி விளையாடி ,
வப்பிலா ஆனந்தத்தில் களித்து ,
சினமின்றி சிநேகம் வைத்து ,
சிறிய காயத்திற்கும் அரற்றி
வென்மணலை வீட்டுச் சோறாய் நினைத்து ,
விளை நிலங்களில் கிடந்தது புரண்டு ,
நெஞ்சில் கனமின்றி நகர்ந்த நாட்கள் !
சோர்வாய் நினைவுகளில் வருமோ ?

Thursday, January 28, 2010

மது ----

மகிமை என்றுரைத்து
அதற்கு அடிமையாகி
வாழ்வை சூன்யமாக்கி
வழக்கினால் அழிந்து
வாடித் துன்புறும்
வேடிக்கை வேண்டாமே !
- வாழ்வினில்........