Tuesday, January 1, 2013

வேண்டலேற்றம் _/\_

வெல்லத் தாள் வேணுமே! மெல்லத் தாள் தருவீரோ! உள்ளத் தால் மருவி, பள்ளத் திலேயே வளரும் கள்ளத் தீவினை கபடனெனை எள்ளத் தினைப் பார்த்தால், தெள்ளத் தெளிந்து, மகிழ்ந்திடுவேனே!

Wednesday, June 29, 2011

மாளா மனம் !

தேடியே இருந்தேன்,
தினம் இளைத்தேன்
கூடியும் பேசினோர்
குறைகளை விட்டகன்றேன்
ஆயினும் மனமோ,!

குன்றொனா குன்றின்
குடங்கை அதிலேறி
குரெங்கென ஆடுது
மாசற வாழவே
மகத்துவம் என்செய்தாய்!

மதிகெட்டு ஓடும்
மனத்திடை புகுந்து
மறித்து விட்டாலும்
மதியினை மதியாமனம்
மடியவில்லை இன்னும்...
-

வினைகள் வீழட்டும்
விடிவு பிறக்கட்டும்
என வாழ்த்துவீரே!

Monday, February 14, 2011

தாயவள் வேண்டுமே!

அப்போ;
தள்ளாடி நடக்கயிலே
தாடையை பிடித்துருவி
இந்தாடி செல்லமென்று
முத்தமழை பொழிந்து
பொழுதாய் சோறூட்டி
பொறுப்பாய் நீராட்டி
வாடாமல் வைத்தவளே!

இப்போ;
தூரமாய் நீயிருந்து
தூலத்தை பாரடாயென்றும்,
விட்டிடாதே பின்னதனால்
கொட்டிடாதே என்றுரைக்கும்
போதெல்லாம் ஏனோயெதற்கோ
ஏக்கமுறுமென் நெஞ்சம்
தேடுதடி உன்மடியை!

Monday, August 2, 2010

உழைப்பும் களைப்பும்;


நாளெல்லாம் உழைத்து நரம்பெல்லாம் இழுக்க,
நல்லுணர்வும் இல்லா நாய்போலே திரிந்து,
உழைத்த பயிரின் உபரிப்போக, விற்றுவந்தால் -
மிஞ்சியிருப்பது என் நெஞ்சின் கனமே !

நாளும் தெரிந்த நல்லோர் நன்றாய் தான் -
சொன்னர்; விவசாயி நாட்டின் முதுகெலும்பென்று
ஒருகனம்; பாரீரெனை தெரிகிறதா? எனது -
முதுகெலும்பு; எத்துனையென்று எண்ணிக்கொள்ளுங்கள்...

Sunday, June 13, 2010

வேடதாரி!

நாளொன்றுக்கு வேறொன்றாய்
முகம் மாற்றும் நானொரு -
நல்ல வேடதாரி! -என்னைப்
போல் நீங்களும் தான்?
வேறென்ன சொல்ல...

Wednesday, June 2, 2010

விரும்பா நேர வெறுப்பில் உமிழ்ந்தவை:

செய்த பிழைக்காக சிரம் தாழ்த்தியும்,
தலைக் கொய்தானே சிறுநெஞ்சை - அவனிடம்
தவறுக்காய் தலைவணங்கியும் விதைத்தானே நஞ்சை
விலையாநிலம் போலானது கடுஞ்சொல்லால் புஞ்சை !

தாயைப் பழித்தானே தரவுக் கூரா ?
அவனுக்கும்பா லூட்டியதொரு தாய் மாரா ?
வார்த்தைகளால் வஞ்சிக்கும் இவன்போன்றோர் தேரா ?
அவனடியையும் தாங்கி நிலமிருக்குது பாரா ?

Friday, March 26, 2010

தமிழன் வாழ்வியல்

ன்றுகூடி கொட்டுங்கடி
கை தட்டுங்கடி !
மிழன்; வாழையடி -
வாழையாய் வாழவேண்டுமடி !

ல்லவனாய் நடிப்பவனுக்கு
ம்பளம் - நாலுகோடி ?
ல்லவனாய் வாழ்பவனின்
வாழ்க்கை நாறுதடி !!

Sunday, January 31, 2010

சிறுபிள்ளை :

டி ஆடி விளையாடி ,
வப்பிலா ஆனந்தத்தில் களித்து ,
சினமின்றி சிநேகம் வைத்து ,
சிறிய காயத்திற்கும் அரற்றி
வென்மணலை வீட்டுச் சோறாய் நினைத்து ,
விளை நிலங்களில் கிடந்தது புரண்டு ,
நெஞ்சில் கனமின்றி நகர்ந்த நாட்கள் !
சோர்வாய் நினைவுகளில் வருமோ ?

Thursday, January 28, 2010

மது ----

மகிமை என்றுரைத்து
அதற்கு அடிமையாகி
வாழ்வை சூன்யமாக்கி
வழக்கினால் அழிந்து
வாடித் துன்புறும்
வேடிக்கை வேண்டாமே !
- வாழ்வினில்........

Thursday, December 31, 2009

[ நீ பெற வேண்டியது நின் கையில் : (எனக்கு இட்டது) ]

காலம்
கடக்கிறது கேட்காமல்,
கரைகிறேன் தெரியாமல் !

மனம்
பழக்கங்கள் பண்பாவதால்,
பண்பெற வேண்டும் !

ஆசை
இருமுனை ஆயுதம்,
ஏற்றமோ பார்க்கணும் !

மனிதன்
மாசற வாழ
மகத்துவம் செய் !

தாய்
தரணியில் ஓர்
தன்னலமற்ற சேவகி !

எண்ணம்
ஏற்றம் வேண்டும்,
எதிலென்று அறி !

கடவுள்
காட்சிப் பொருளல்ல
கண்டுபிடி நீயே !

யோகம்
புத்தனாய் இல்லாவிடினும்,
புத்தியால் பயன்பெறு !

காதல்
காமக் காதலுண்டு,
காதல் காமமில்லை !

தமிழ்
தாயின் நேசத்தை,
தானறிய வேண்டும் !

தோழமை
நெடிய வழியில்,
வருமொரு துணை !

முன்னோர்
மூத்தோர் முதுமொழி,
நன்மொழி ஒன்றே !

சித்தன்
எளிமை கொண்டதனால்
ஏற்றம் கண்டோர் !

அறிவு
மெய்யென்ற ஒன்றை,
நாடத்தான் சமயங்கள் !

Sunday, December 13, 2009

[:மனிதன் என்ற மகத்துவன்:]

தன் சிந்தையாலே
எதையும் வென்று-விட்டான் !
இயந்திரம் எல்லாம்
தந்திரமாய் கண்டு-விட்டான் !


பம்பரமாய் சுற்றி -சுற்றி
வாழ பழகிக்-கொண்டான் !
பாரினிலே புதுப்-பொலிவு
யாவும் பெற்று - கொண்டான் !

தேன் தமிழை இவன்
பேச நாக் கூசுகின்றான் !
பட்டறிவை பகுத்தறிவு என்று
இவன் நினைத்து கொண்டான் ! !

இத்தனைக்கும் காரணம்
என்ன என்றால்?
பர அறிவை சாராமல்
தனியாகவே இருந்து விட்டான் ! !

Thursday, November 26, 2009

[இன்னொரு இதயம் வேண்டும்]

இருவரின் காமப்பசிக்கு
பிறந்த பிள்ளை !

தன்வயிற்றுப் பசிக்கு
பிச்சை எடுக்கிறது ?

எதிர்காலத்தின் கனவு
கண்களில் இல்லை !

அதன் நிகழ்காலமோ
மற்றவர்க்கு தொல்லை?

நெஞ்சமது குமுறுகிறது !!
நெருடலான நிமிடங்களை -

கடக்க இன்னொரு
இதயம்தான் வேண்டும் !

Monday, November 16, 2009

[காதல்]

ஒன்றான உருவே
உருவற்ற திருவே
நன்றான ஒன்றே !
நமனோட்டும் அரசே !!

கன்றான என்றன்
கர்மங்கள் தொலைக்க
கனிவது செய்வீர் !
காதலை ஏற்பீர் !!

Monday, November 9, 2009

[கவிதை]

மழைக்குள் குடை இருந்தும் ;
குடைக்குள் மழை வருவதில்லை !

இறைக்குள் நாம் இருந்தும் ;
இறைப் பற்றிய தெளி(ரி)வு இல்லை !

மனிதனின் மகத்துவம் அறிந்தும் ;
நல்வாழ்வு வாழ்வார் இல்லை !

கர்மங்களை தொலைத்து நாம் ;
கடைத்தேறுவது எக்காலமோ ?

Friday, November 6, 2009

இயற்கை என்னும் இளையவன்

எவ்வளவு நீரைய்யா எங்கே வைத்திருந்தார் !
இவ்வளவு நீரையும் எப்படி பாதுகாத்தார் !

கொஞ்சம் நினையுங்கள் கர்மங்களை தொலையுங்கள்
தஞ்சமுடைய இயற்கையை விஞ்சும் மனிதரில்லை !

இருப்பிடம் தரனியாய் வைத்தது யார்
கேட்டுப்பெற்றோமா இல்லை கெட்டுப் பெற்றோமா ?

விட்டொழித்து அழைத்து செல்ல வருவாரா !
கோள்களும் கணக்காய் சுற்றுவது எப்படி !

எண்ணற்ற கேள்விகள் அடிமனத்தின் ஆழத்தில்
எப்போது பதில்வந்து எனக்கு கிடைக்கும் !!!!!!

படைத்தவன் அருளென்று சும்மாயிருக்கவும் முடியவில்லை,
எம்மால் ஆவதாக எதுவும் விளங்கவில்லை.